நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

விற்பனை வாய்ப்பை அதிகப்படுத்தும் கோழிகளின் வளர்ப்பு



மேலே


ஆயிரம் ஈமு கோழிகளுடன் ஒரு பண்ணையைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமணரெட்டி (அலைபேசி - 094408 - 92951). இந்த இனக்கோழிகளை முதன்முதலாக இந்தியாவுக்கு அநிமுகப்படுத்திய  இவர், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தூனி என்ற குட்டி நகரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள ஹம்சவரம் என்ற கிராமத்தில் ‘ஃப்ளைட்லெஸ் பேர்ட்ஸ் ஆஃப் இண்டியா’ (Flightless birds of India) என்ற பெயரில் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 650 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பண்ணையைப் பார்வையிட நாடு முழுவதுமிருந்து விவசாயிகள் வந்து செல்கின்றனர்.
“ஈமு கோழி முதன் முதலாக 1996 - ம் ஆண்டு இந்தியாவில் வந்து இறங்கிய இடம்.. சென்னை விமான நிலையம். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து 12 குஞ்சுகளை வாங்கி வந்தார். 

ஈமு கோழிகளின் வளர்ப்பு அனுபவத்தை பற்றி இவர் கூறியதாவது: 

நான் வைத்திருக்கும் ஆயிரம் கோழிகளும் முழுக்க முழுக்க குஞ்சு உற்பத்திக் காகத்தான் வளர்கின்றன. ஆயிரம் கோழிகள் என்றவுடன் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கோழிகளுக்கு இடம் வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். பத்து ஏக்கர் நிலத்தில்தான் இவை வளர்கின்றன. இதற்காக கொட்டகைகூட போடவில்லை. மாமரங்களுக்கு இடையேதான் வலம் வருகின்றன. கோழிகள் வெளியே ஓடிவிடாமல் இருப்பதற்காக மட்டும் கம்பி வேலி போட்டுள்ளோம். மற்றபடி காற்று, மழை, என்று எதற்கும் கலங்காமல் உள்ளன. வெயில் என்றால் இவைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதனால் தான் அதிக வெயில் அடிக்கும் ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பண்ணைகள் உருவாகின்றன. ஒரு வார வயதுடைய குஞ்சுகளை ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறோம். சிலர் எங்களிடம் வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்’.

குறைந்தபட்சம் நூறு கோழிகள் இருக்க வேண்டும். பெண் கோழிகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஆண் கோழிகளின் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் தேவைப்படும். கோழிகளுக்கு ஒரு ஏக்கர், தீவனம் மற்றும் இடுபொருட்கள் வைக்க ஒரு ஏக்கர் என்று பிரித்துக் கொள்ளலாம். கோழிக்குஞ்சுகள், பண்ணை அமைக்கும் இடம். பராமரிப்பு, இங்குபேட்டர், தீவனம் என்று எல்லாவற்றையும் கணக்கிட்டால்.. அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். நான்கு அல்லது ஜந்து வருடத்தில் இதைத் திரும்ப எடுத்து விடலாம்.

ஒரு குஞ்சு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம் 500 குஞ்சுகளில் இருந்து மூன்றாம் ஆண்டே, கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய் கிடைத்துவிடும். ஈமு வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நபார்டு வங்கிக் கடன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் 40 லட்சம் வரை கடன் வழங்குகிறார்கள். இதில் 15 லட்ச ரூபாய் வரை வட்டியில்லா கடனாகும்.

இவருடைய கணிப்புப்படி இந்தியாவில் ஈமு கோழிப் பண்ணைகள் நிறைய உருவாக வேண்டும். அதற்காக குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் பெருகவேண்டும். ஒருகட்டத்தில் கோழிகளின் எண்ணிக்கை பெருகியவுடன், இறைச்சிக்குப் பயன்படுத்துவார்கள். சுவை மிகுந்த இந்த கறிக்கு வரவேற்பு இருக்கும். ஈமு வளர்ப்பை விஞ்ஞான அடிப்படையில் கத்துக்கிட்டு முறையாக வளர்த்தால் எதிர்காலத்தில் இது மிக அருமையான தொழிலாக அமையும்.

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...