குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: குவைத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக தமிழக
அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான
குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு கனரக மற்றும் லகுரக வாகன
ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குவைத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்துடன் ஓராண்டுக்கு
செல்லத்தக்க வகையில் அந்நாட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும்.
தகுதி உடையவர்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2
போட்டோக்களை இணைத்து தலைவர் , அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48,
டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை -20 என்ற முகவரிக்கு 20-ந்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் குவைத் நாட்டின்
சட்டதிட்டப்படி இதர சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல்
விவரங்கள் அறிய 99403-93617 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்